logo
கீரமங்கலம் ஜேசீ சார்பில் ஏழைக் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள்

கீரமங்கலம் ஜேசீ சார்பில் ஏழைக் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள்

20/Nov/2020 10:43:53

கீரமங்கலம்  ஜேசீ (JCI) மற்றும் புதுக்கோட்டை மாவட்ட செயற்கை முறை கருவூட்டல் சங்கம் சேர்ந்து நடத்திய நலத்திட்ட உதவிகள் மற்றும் கீரமங்கலம் காவல் நிலையத்திற்கு தடுப்பு அரண்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் சிவ. வீ. மெய்யனாதன்  தலைமையில் நடைபெற்றது.

 விழாவிற்கு ஜேசீ  அமைப்பின் மண்டல தலைவர் எஸ். பிரதாப் சேது, மண்டல இயக்குனர்கள்  பி. விஜயராஜா, ஜெய பிரதாப், கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.விழாவில், 4 நபர்களுக்கு பசு கன்று குட்டிகளும், ஒரு நபருக்கு தையல் இயந்திரமும், கீரமங்கலம் காவல் நிலையத்திற்கு நான்கு தடுப்பு அரண்களும் வழங்கப்பட்டது.

 இந்த நிகழ்விற்கு கொடையாளிகளாக இருந்த புதுக்கோட்டை மாவட்ட செயற்கை முறை கருவூட்டல் சங்கத்தைச் சார்ந்த உறுப்பினர்களுக்கும், முன்னாள் ஜேசீ (J C I) தலைவர்களுக்கும் சட்டமன்ற உறுப்பினருக்கும்  பாராட்டு தெரிவிக்கப்பட்டது.  நிகழ்ச்சியினை குருகுலம் சிவ நேசன் தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை திட்ட இயக்குனர் முத்து  செய்திருந்தார்.  ஜேசீ பழனியப்பன்  நன்றி கூறினார்.

Top