15/Nov/2020 11:00:30
சென்னை:தமிழகம் முழுவதும் இன்று காலை 11:30 மணி அளவில் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் இந்த பட்டியலை வெளியிடவுள்ளனர்.
இம்மாதம் 21 மற்றும் 22 தேதிகளிலும், அடுத்த மாதம் 12,13 -ஆம் தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்தம் செய்வது தொடர்பாக சிறப்பு முகாம். 2021 -ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலையொட்டி ஜனவரி மாதம் 20 -ஆம் தேதி இறுதிவாக்காளர் பட்டியலை வெளியிடவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள விரும்புவோர் நான்கு நாள் நடைபெறும் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.