15/Nov/2020 07:19:58
புதுக்கோட்டை நகரின் கிழக்குப்பகுதியில் காவல் தெய்வமாக அருள்பாலித்துவரும் பொற்பனைக் கோட்டை ஸ்ரீ முனீஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி மற்றும் ஐப்பசி மாத நிறைவு மண்டகப்படி விழா (15.11.2020)நடைபெற்றது.
குருபெயர்ச்சியை முன்னிட்டு ஸ்ரீ முனீஸ்வரர் சுவாமிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட புண்ணிய தீர்த்த அபிஷேகம் நடைபெற்றது. மேலும், முனீஸ்வரருக்கு வடைமாலை மற்றும் மலர் அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது.
விழாவில், புதுக்கோட்டை, ஆலங்குடி, திருவரங்குளம் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் வருகைதந்து தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, இந்துசமயஅறநிலையத்துறை நிர்வாகத்தினர் மற்றும் பழனியப்பன் பூசாரி தலைமையிலான விழாக்குழுவினர் செய்தனர்.