01/Nov/2020 09:56:55
கடலூர்: கடலூர் கம்பியம்பேட்டையில் ஒரே இடத்தில் ஐந்து விஷப்பாம்புகள் பிடிபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் கம்பியம்பேட்டை குப்பைமேட்டில் அருகே ஜே ஜே நகர் அருகில் குப்பை சுத்தம் செய்யும் பொழுது இரண்டு பாம்புகள் இருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த பாலாஜி மஞ்சகுப்பம் சமூக ஆர்வலர் பாம்பு பிடிக்கும் செல்லா விற்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக அங்கு வந்த சமூக ஆர்வலர் பாம்ப பிடிக்கும் செல்ல சம்பவ இடத்திற்கு சென்று பாம்புகளை பிடித்தார். முதலில் 5 அடி நீளமுள்ள இரண்டு கண்ணாடி விரியன் பாம்புகள் பிடிபட்டன.
பிறகு அதே இடத்தில் இருந்த நான்கரை அடி நீளமுள்ள நல்லபாம்பு மற்றும் 4 அடி நீளமுள்ள வெள்ளி.கோல் வரையன் பாம்பு பிடிபட்டது. அதன் பிறகு 2அடி நீளமுள்ள நல்ல பாம்பும் பிடிபட்டது. பின்னர் 5 பாம்புகளும் காப்புக்காட்டில் விடப்பட்டது. இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.