logo
ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே  கர்நாடகாவுக்கு 500 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி சென்ற வேன் டிரைவர் கைது

ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே கர்நாடகாவுக்கு 500 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி சென்ற வேன் டிரைவர் கைது

28/Jul/2021 06:28:28

ஈரோடு,ஜூலை: ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே  கர்நாடகாவுக்கு 500 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி சென்ற வேன்ஓட்டுனரை  மாவட்ட குடிமை பொருள் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டங்களில் இருந்து சமீபகாலமாக கர்நாடக மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம் தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகருக்கு கடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து மாவட்ட குடிமை பொருள் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தாளவாடியில் இருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை போலீசார் தாளவாடி அடுத்த ஒங்கனபுரம் கிராமத்தில் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு டாடா மின் டெம்போ கார் வந்தது. காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

 அந்த காரை தாளவாடி ஒங்கனபுரம் பகுதியைச் சேர்ந்த வீரன்னா (48) என்ற வேன் டிரைவர் ஓட்டி வந்ததும். வேனில் 500 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகருக்கு கொண்டு செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து வீரன்னாவை  குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Top