30/Jun/2021 04:04:47
புதுக்கோட்டை, ஜூன்: பாலியல் தொந்தரவு தருவாகக்கூறி பூச்சி மருந்துடன் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு குழந்தையுடன்ஒரு பெண் புகார் அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்த விவரம்: புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா, வெள்ளாளர் கிராமத்தைச்
சேர்ந்த ராதிகா என்பவர் கணவனை இழந்து தனது 5 வயது குழந்தையுடன் தனியாக
வாசித்து
வருகிறார்.
குடும்ப சூழ்நிலை காரணமாக ஆவுடையார் கோவிலில்
உள்ள ராமன் என்பவருக்கு சொந்தமான மரக்கடையில்
வேலை பார்த்து வந்தார். கடையின் உரிமையாளர்
ராமன் இவருக்கு பாலியல் தொந்தரவு செய்ததால் அங்கு வேலைக்கு செல்வதை நிறுத்தி விட்டார்.
பின்னர் வேறு ஒரு கடைக்கு வேலைக்கு சென்ற ராதிகாவை விடாமல் மரக்கடை உரிமையாளர் ராமன் தொந்தரவு செய்ததுடன் கொலை மிரட்டல் விடுத்தாராம். இதையடுத்து ராமன் மீது அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை
எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தொடர்ந்து பாலியல் தொந்தரவு தருவதுடன் குழந்தையையும் தன்னையும் கொலை செய்து விடுவதாக ராமன் மிரட்டி வருவதாகக் கூறிய ராதிகா அவர் மீது நடவடிக்கை எடுக்க
வேண்டும் என வலியுறுத்தி தனது குழந்தையுடன் கையில் பூச்சிமருந்து பாட்டிலுடன் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புதன்கிழமை புகார் மனு அளித்தார். தனது
புகார்
மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நானும் எனது குழந்தையும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் கூறி மனு அளித்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.