logo
அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பாட. நூல்களை வழங்கி 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சியை முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..

அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பாட. நூல்களை வழங்கி 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சியை முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..

19/Jun/2021 07:03:15

சென்னை, ஜூன்: அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பாட. நூல்களை வழங்கி 1 முதல். 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சியை முதலமைச்சர். மு.. ஸ்டாலின் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வண்ணமாக, அம்மாணவர்களுக்கு அரசு, பாடநூல்களை வழங்கி வருகிறது.  2021-2022ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில்,


தமிழ்நாடு முதலமைச்சர் மு.. ஸ்டாலின் சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்  (19.6.2021)  நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பாட நூல்களை வழங்கியும், கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பள்ளி செல்ல இயலாமல் இருக்கும் மாணவர்கள், வீட்டில் இருந்தபடியே கல்வி பயில ஏதுவாக 1 முதல் 12 வரை அனைத்து வகுப்புகளுக்கும் உரிய அனைத்து பாடங்களுக்குமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.

இத்திட்டம் சுமார் 292 கோடி கல்வித் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படுகிறது. இதனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 69 இலட்சம் மாணவர்கள் பயன் பெறுவர். அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.. ஸ்டாலின் அம்மாணவ, மாணவியர்களிடம்  நலம் விசாரித்து, அவர்களுக்கு பேனா மற்றும் சாக்லேட்டுகளை வழங்கி கலந்துரையாடினார்.

இந்நிகழ்ச்சியில்பொதுப்பணித் துறை அமைச்சர்எ.. வேலுமருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் அமைச்சர் மா. சுப்பிரமணியன்பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்.அன்பில் கேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர்  உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித் நுறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Top