01/May/2021 06:15:20
புதுக்கோட்டை, மே: உலக தொழிலாளர் தினத்தையொட்டி மரம் நண்பர்கள் அமைப்பு சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற மே தின விழாவில் புதுக்கோட்டை நகராட்சியில் பணியாற்றும் சுகாதாரப்பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
புதுக்கோட்டை மரம் நண்பர்கள் அமைப்பு சார்பில் நிஜாம் காலனியில் நடைபெற்ற மே தின கொண்டாடப்பட்டத்துக்கு பேராசிரியர் சா.விஸ்வநாதன் தலைமை வகித்தார், மக்கள் நீதிமய்ய விவசாய அணி மாவட்ட தலைவர் கார்த்திக் மெஸ் மூர்த்தி வரவேற்றார். பழனியப்பா மெஸ் கண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மக்களின் சுகாதாரத்தைக் காக்கும் வகையில் நகரை சுத்தம் செய்யும் பணிகளை பாராட்டி சுகாதாரப் பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கினார். அனைவருக்கும் கை கழுவதற்கான சோப்புகளையும் வழங்கி வாழ்த்தினார்.
விழாவில், இந்திய விவசாய சங்கத் தலைவர் ஜி.எஸ்.தனபதி, நகர்மன்ற முன்னாள்
உறுப்பினர் ஏ.எம்.எஸ். இப்ராஹிம் பாபு ஆகியோர் வாழ்த்தி
பேசினர். இதில், பாரதவிலாஸ் கிருஷ்ணமூர்த்தி, மொபைல் ராசு, பொறியாளர்கள் ரியாஸ்கான், இறையன்பு, பிரகாஷ்,
நகராட்சி சுகாதார மேற்பார்வையாளர்
பூமாலை ஆகியோர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை மரம் நண்பர்களின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் ஜி.எட்வின் செய்திருந்தார் சுகாதாரப் பணியாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.