29/Apr/2021 11:51:22
புதுக்கோட்டை, ஏப்: புதுக்கோட்டை புதிய பேருந்து நிலைய வளாகத்தின் மையத்தில் அமைக்கப்பட்ட பகுதியில் வியாழக்கிழமை காலையிலிருந்து நகரப் பேருந்துகள் இயங்கத் தொடங்கின
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நகரப் பேருந்துகளுக்கான நிறுத்தம் உள்பட புதுக்கோட்டை நகராட்சியில் ரூ.11.25 கோடி மதிப்பில் முடிவுற்ற பல்வேறு திட்டப்ப ணிகள் கடந்த 26.2.20121 - ஆம்தேதி பிற்பகலில் துவக்கி வைக்கப்பட்டது. இதே நாளில் மாலை சுமார் 4 மணியளவில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை யடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன.
திறப்பு விழா கண்டு கடந்த 2 மாதங்களாக இப்பகுதி பயன்படுத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை(ஏப்.29) காலையிலிருந்து இந்தப்பகுதியில் நகரப் பேருந்துகள் இயக்கம் தொடங்கியது. எனினும் பயணிகளுக்கு இப்பகுதியில் குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டுமென பயணிகளும் சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.