23/Apr/2021 06:15:06
ஈரோடு, ஏப்: ஈரோடு மாவட்டத்தில் வேகமெடுக்கும் தொற்று பரவல்.. ஈரோட்டில் கொரோனா
தினசரி பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலைவீச்சைக் கட்டுப்படுத்த
மாவட்ட நிர்வாகம் சுகாதாரத் துறையுடன் இணைந்து
பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஈரோட்டில் கடந்த வருடம் தொற்று உச்சத்தில் இருந்தபோது தினமும் 2,000 பேருக்கு
கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள்
உடனுக்குடன் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சை
அளிக்கப்பட்டது. இதையடுத்து
மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறையத் தொடங்கியதும்
பரிசோதனைகளும் குறையத்
தொடங்கியது.
தற்போது மீண்டும் கொரோனா வேகமெடுத்து உள்ளதால் தினசரி பரிசோதனை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்போது நாளொன்றுக்கு
2700-க்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு
வருகிறது. இந்நிலையில் வியாழக்கிவமை ம் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 3 ஆயிரத்து 98 பேருக்கு
கொரோனா
பரிசோதனை மேற்கொள் ளப்பட்டுள்ளது. தற்போது தினசரி பாதிப்பு 200-ஐ
கடந்து உள்ளது.
இதனால் தொற்று ஏற்பட்டவர்கள் உடனுக்குடன்
கண்டறியப்பட்டு அவர்களின்
நோய் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்பட்டு
வருகிறது. ஈரோட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள்,
ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சில
குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு
வருகிறது. வியாழக்கிழமை வரை மாவட்டம் முழுவதும் இதுவரை
4 லட்சத்து 76 ஆயிரத்து 345 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் கூடுதலாக
பரிசோதனைகள் செய்யப்படும் என சுகாதாரத்
துறையினர் தெரிவித்துள்ளனர்.