09/Apr/2021 11:41:57
புதுக்கோட்டை, ஏப்: தேர்தல் நடந்து முடிந்த புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தை தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான பி. உமாமகேஸ்வரி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து அதற்கான பதிவேட்டில் கையொப்பமிட்டார். உடன் ஆலங்குடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அக்பர்அலி.