17/Mar/2021 05:17:54
புதுக்கோட்டை, மார்ச்:புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கார்த்திக் மெஸ் மூர்த்தி இன்று (17-03-2021) காலை 11.00 மணிக்கு தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.
கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியின் தலைவர்கள், நிர்வாகிகளின் வாழ்த்துகளை மாவட்ட அலுவலகத்தில் பெற்றபின் தனது வேட்பு மனுவை புதுக்கோட்டை தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்யவுள்ளதாக அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.