logo
காணொலி வாயிலாக பிப்ரவரி-2-இல் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறை கேட்பு கூட்டம்: ஆட்சியர் தகவல்

காணொலி வாயிலாக பிப்ரவரி-2-இல் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறை கேட்பு கூட்டம்: ஆட்சியர் தகவல்

31/Jan/2021 10:46:22

புதுக்கோட்டை, ஜன: இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்: 

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கான  குறை கேட்பு முகாம் வரும் செவ்வாய்க் கிழமை(2.2.2021)  காணொலிக்காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது.

  புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக கலந்துக்கொள்ளும் வகையில் அனைத்து வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

 எனவே,  அந்தந்த வட்டாரங்களில் உள்ள விவசாயிகள் வட்டார வேளாண் உதவி இயக்குநர்  அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.  இந்தக்கூட்டத்தில்  பங்கேற்கும் விவசாயிகள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளிவிட்டு கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான  கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயனடையலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


Top