logo
கொரோனா  காலத்தில் சிறப்பாக பணிபுரிந்த சித்த மருத்துவர்களுக்கு தெலங்கானா ஆளுநர் விருது

கொரோனா காலத்தில் சிறப்பாக பணிபுரிந்த சித்த மருத்துவர்களுக்கு தெலங்கானா ஆளுநர் விருது

07/Dec/2020 05:34:37

சென்னை: கொரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய சித்த மருத்துவர்களுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்  விருதுகளை வழங்கினார். 

கொரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய சித்த மருத்துவர்களுக்கு ஆயூஷ் எக்சலண்ட் விருது வழங்கும் விழா சென்னை எழும்பூரில் நடைபெற்றது.தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து ஆயுஷ் எக்சலண்ட் விருதுகளை சித்த மருத்துவர்களுக்கு வழங்கிப் பேசினர்.

நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை அமைச்சர்  சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், இந்திய ஹோமியோபதி சங்க தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Top