18/May/2020 12:56:59
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே மின்னல் தாக்கியதில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒருவர் உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த காற்று, இடியுடன் மழை பெய்தது. விராலிமலை பகுதியிலும் இடியுடன் மழை பெய்துள்ளது. விராலிமலை அருகேயுள்ள வானதிரையான்பட்டியைச் சேர்ந்த சு.சண்முகம் (50). வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அப்போது, மின்னல் தாக்கி சம்பவ இடத்திலே சண்முகம் உயிரிழந்தார்.