logo
வடகிழக்கு பருவமழையை எதிர்க்கொள்ள தயார் நிலையில் புதுக்கோட்டை: நகராட்சி  ஆணையர்  ஏ.ஜஹாங்கீர்பாஷா தகவல்

வடகிழக்கு பருவமழையை எதிர்க்கொள்ள தயார் நிலையில் புதுக்கோட்டை: நகராட்சி ஆணையர் ஏ.ஜஹாங்கீர்பாஷா தகவல்

29/Oct/2020 06:55:19

புதுக்கோட்டை: வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்ளும் வகையில் புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நேரில் (அக்.28) ஆய்வு செய்த பின் நகராட்சி ஆணையா ஏ.ஜஹாங்கீர் பாஷா  கூறியதாவது. 

பருவமழையின் போது கிடைக்கப்பெறும் மழைநீரை முழுவதுமாக சேமிக்கும் வகையில் குடிமராமத்து பணித்திட்டம் மற்றும் ஏரி, கால்வாய்கள், வரத்துவாய்க்கால்களை தூர் வாருதல் என முன் எப்போதும் இல்லாத வகையில் நீர் மேலாண்மையில் தமிழகமுதல்வர்  தனிக்கவனம் செலுத்தி வருகிறாh;கள். அதே போன்று கடந்தகால நிகழ்வுகளை கருத்தில் கொண்டு வடகிழக்கு பருவமழை காலங்களில் டெங்கு உள்ளிட்ட நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள  மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்  உத்தரவிட்டுள்ளார்.  அந்தவகையில் மாவட்ட ஆட்சியரின்  அறிவுறுத்தலுக்கிணங்க   நகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் நோய்தடுப்பு நடவடிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை நகராட்சியை பொறுத்தவரை 42 வார்டுகளை உள்ளடக்கி 499 வீதிகள் மற்றும் 36,030 வீடுகள் என 1,43,748  மக்கள் தொகையை கொண்டதாக திகழ்கிறது. வடகிழக்கு பருவமழையின் போது டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள்; பரவாமல் தடுக்கும் வகையில் முதற்கட்டமாக 400 பணியாளர்களை கொண்டு வாரம் முழுவதும் தொடர்ச்சியாக சுழற்சி முறையில்  லார்வா  கொசுப்புழு உருவாகாத வகையில் மருந்துகள் அடிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் நல்ல தண்ணீரில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாக வாய்ப்பாக அமைந்துள்ளது என்பதால் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளார்ள் மூலம் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று தங்கள் வீட்டில் பிரிட்ஜ் பின்புறம் நீர் தேங்காத வகையில் அவ்வப்போது  அப்புறபடுத்தவும், டயர்கள், தேங்காய் சிரட்டுகள், பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்டவைகள் தங்கள் வீடுகளை சுற்றி  குவிந்து கிடக்காத வகையில் அப்புறப்படுத்துவது  குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதவிர டெங்கு ஒழிப்பு பணியில் 80 பணியாளர்கள் முழுநேரமும் பணியாற்றி வருகின்றனா;. 


புதுக்கோட்டை நகராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்குவதற்கென 12 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளும், 2 தரைமட்ட தொட்டிகளும் என 14 நீர்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தொட்டிகளுக்கு நீரேற்று நிலையங்களான திருவப்பூர், மச்சுவாடி, அம்மையாபட்டி ஆகிய நீரேற்று நிலையங்களில் தினந்தோறும் தானியங்கி முறை மூலம்  குடிநீரில் குளோரைனேசன் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர்; விநியோகம் செய்யப்படுகிறது. 

புதுக்கோட்டை நகராட்சி பகுதிளில் குப்பைகள், கழிவுநீர் உள்ளிட்டவைகளை தேங்காத வகையில் உடனுக்குடன் அப்புறப்படுத்திடவும், இப்பணிகளை கண்காணித்திட தனி அலுவலர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் இத்தகைய தருணத்தில் காய்ச்சியை நீரை பருகுதல், தங்கள் சுற்றுச்சுழலை தூய்மையாக வைத்திருப்பது போன்ற  உள்ளிட்ட அரசு கூறும் வழிமுறைகளை தவறாது கடைபிடித்து உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்  ஆணையர் ஏ.ஜஹாங்கீர்பாஷா .


Top