logo
தீபாவளியையொட்டி, தமிழகத்தில் 3,700 தற்காலிக பட்டாசுக் கடைகளுக்கு தீயணைப்புத்துறை அனுமதி

தீபாவளியையொட்டி, தமிழகத்தில் 3,700 தற்காலிக பட்டாசுக் கடைகளுக்கு தீயணைப்புத்துறை அனுமதி

28/Oct/2020 02:36:34

சென்னை:  தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 14 -ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தியாவளி வியாபாரம் விறு விறுப்பு அடைந்துள்ளது. தற்காலிக பட்டாசுக் கடைகளும் ஆங்காங்கு திறக்கப்பட்டு வருகின்றன. விபத்துகளைத் தடுக்கும் வகையில் தற்காலிக பட்டாகக் கடைகள் வைப்பதற்குரிய கடுமையான விதிமுறைகளை தீயணைப்புத்துறை அமல்படுத்தி வருகிறது.

தீயணைப்புத்துறையின் தடையில்லாச் சான்றிதழ் பெற்றால் தான் அந்தந்த மாநகர காவல்துறை அல்லது  வருவாய்த் துறையிடமிருந்து உரிமம் பெற முடியும் பட்டாசு கடைகளை ஒழுங்குபடுத்துவற்காக தீயணைப்புத்துறை இயக்குநரும் டிஜிபியுமான சி.சைலேந்திரபாபு தீயணைப்பு நிலையங்களுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே ஒரு சுற்றறிக்கை அனுப்பினார்.

அதில், பட்டாசுக் கடைகள் வைப்பதற்கு வெடிபொருள் சட்ட விதிகளின்படி தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்றிதழே முக்கியமானது. இந்த சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே பிற துறையினரிடமிருந்து சான்றிதழ்களைப் பெற முடியும்.

கடந்தாண்டு தற்காலிக பட்டாசுக் கடைகள் திறப்பதற்கு 5,688 விண்ணப்பங்கள் வந்தன. இதில் 5, 285 கடைகளுக்கு தடையில்லாசான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 400 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

3700 கடைகளுக்கு அனுமதி: நிகழாண்டில்  தீபாவளிக்கு பட்டாசுக் கடைகள் வைப்பது   தடையில்லா சான்றிதழ் கோரி தமிழக தீயணைப்புத்துறைக்கு 4,500 விண்னகாப்பங்கள் வந்துள்ளன. இதில் 3700 விண்ணப்பங்களுக்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்பட் டுள்ளன. தகுதி இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.600 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.

சென்னையில் தீவுத் திடல் தவிர்த்து பட்டாசுக் கடைகள் வைப்பதற்கு விண்ணப்பித்த 132 பேரில் செவ்வாய்க்கிழமை வரை 15 பேர் மட்டுமே தடையில்லாச் சான்றிதழ் பெற்றுள்ளனர். பிற விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.

கொரோனா தொற்றால் குறைந்தது:

கடந்த 6 ஆண்டுகளில் ஒப்பிடுகையில் பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கு அனுமதி கோரி நிகழாண்டில் தான்  மிகக் குறைவான அளவில் விண்ணப்பங்கள் தீயணைப்புத்துறைக்கு வந்துள்ளன. தீபாவளிக்கு 3 வாரங்கள் கூட இல்லாத நிலையில் புதிய விண்ணப்பங்கள் வருவதற்கு வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பல்வேறு தொழில்துறைகளும் பின்னடைவைச்  சந்தித்து வருவதால், பட்டாசு விற்பனையிலும் அதன் பாதிப்பு பிரதிபலிக்கிறது. மக்களிடம் இயல்பான பணப்புழக்கம் இல்லாததால் பட்டாசுக் கடைகள் வைப்பதற்கு  வியாபாரிகளிடம் தயக்கம் ஏற்பட்டுள்ளது. அதனாலேயே பட்டாசுக் கடைகளின்  எண்ணிக்கை வெகுவாக குறைத்துள்ளதாக சென்னை பட்டாசு வியாபாரி ஒருவர் தெரிவித்தார்

தயார் நிலையில் 7,000 வீரர்கள்: தீபாவளியையொட்டி, பட்டாசினால் ஏற்பட்டும் தீ விபத்துகளைத் தடுக்கும் வகையில், தீயணைப்புத்துறை டிஜிபி சி.சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் 7,000 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 1,200 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

பிற மாவட்டங்களில்  இருந்தும் 250 வீரர்கள்  சென்னைக்கு  தீபாவளி பண்டிகையை யொட்டி  வரவழைக்கப்படுகின்றனர், சென்னையில் 85 தீயணைப்பு வாகனங்கள் தயார்   நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதில் 19 தீயணைப்பு வாகனங்கள் வெளி மாவட்டங் களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Top