14/Oct/2020 04:24:25
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் மாவட்ட கருவூலம் உள்ளது இதில் மூன்றாவது மாடியில் முதுநிலை கொதிகலன் உதவி இயக்குநர் செயல்பட்டு வருகிறது. இங்கு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆலைகளிலுள்ள கொதிகலன்களை ஆய்வு செய்து தரச் சான்றிதழ் அளித்து வருகின்றனர்.
இந்த அலுவலகத்தில் தரச்சான்றிதழ் வழங்க பணம் கேட்பதாக ஈரோடு மாவட்ட , ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீஸார் முதுநிலை கொதிகலன் உதவி இயக்குனர் அலுவலகத்தில் இன்று திடீர் சோதனை நடத்தினர். அச்சோதனையில் கணக்கில் வராத ரூ.1.60 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அலுவலத்தில் உள்ளவர்களிடம் தீவிர விசாரணை நடத்திதினர்..