logo
ரூ.10,000 கோடி முதலீட்டில் 14 புதிய தொழில் நிறுவனங்களுடன் முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்

ரூ.10,000 கோடி முதலீட்டில் 14 புதிய தொழில் நிறுவனங்களுடன் முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்

12/Oct/2020 04:34:19

சென்னை: ரூ.10,000 கோடி முதலீட்டில் தொழில் தொடங்குவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, உலக பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டு, படிப்படியாக மீண்டெழுந்து வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை தொடர்ந்து மேம்படுத்திடவும், தொழில்துறையில் தொடர்ந்து முன்னணி மாநிலமாக திகழச் செய்திடவும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரின் சீரிய வழிகாட்டுதல்களின்படி, தமிழ்நாடு அரசின் தொழில்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் பயனாக, இந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் ஆறு மாதங்களில் இந்திய அளவில் மிக அதிக முதலீடுகளை &டவ;ர்த்த முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் வரை, 42 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், 31,464 கோடி ரூபாய் முதலீடுகளுக்கு கையெழுத்திடப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக, 14 புதிய தொழில் திட்டங்களை, தமிழ்நாட்டில் துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கையெழுத்திடப்பட்டன.

தற்போது நிலவி வரும் சூழ்நிலையின் காரணமாக, இந்த 14 திட்டங்களில், 4 திட்டங்களுக்கு காணொலிக் காட்சி மூலமாகவும், 10 திட்டங்களுக்கு நேரடியாகவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இத்திட்டங்களின் மூலம், சுமார் 7,000 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


                                                                               


Top