07/Oct/2020 09:48:47
ஈரோடு: கோபிசெட்டிபாளையம் பேருந்துநிலையத்தில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில், நகராட்சியில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் குப்பைகளை அகற்றவேண்டும் என கோபிசெட்டிபாளையம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் நகராட்சி பொறியாளரின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம், கோபிகோபிசெட்டிபாளையம் நகராட்சியில் இரண்டு நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படவேண்டும் குப்பைகளை அன்றாடம் அப்புறப்படுத்த வேண்டும் சாலைகளில் குடிநீர் மற்றும் புதைவழி மின் தடத்திற்காக தோண்டப்பட்ட குழிகளை உனடியாக மூடி சாலையை மேம்பாடு செய்யவேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் 200-க்கும் மேற்பட்டவர்கள் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் நகராட்சிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நாகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு திமுக வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் திமுக, மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் உள்பட கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்..