logo
அமுதன் அடிகள் வெள்ளிவிழா அறநிலையம் சார்பில் சிறந்த எழுத்தாளர்களுக்கு பரிசு அறிவிப்பு

அமுதன் அடிகள் வெள்ளிவிழா அறநிலையம் சார்பில் சிறந்த எழுத்தாளர்களுக்கு பரிசு அறிவிப்பு

07/Aug/2021 10:27:33

சென்னை, ஆக: அமுதன் அடிகள் வெள்ளிவிழா அறநிலையம் சார்பில் சிறந்த எழுத்தாளர்களுக்கு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக  அறநிலையத்தலைவர் அமுதன் அடிகள் வெளியிட்ட தகவல்:

1995 -ஆம் ஆண்டுமுதல் இயங்கிவரும் எமது அறக்கட்டளை ஆண்டுதோறும் சிறந்த தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு அமுதன் அடிகள் இலக்கியம் -பரிசு வழங்கிச் சிறப்பித்து வருகிறது. நிதிநெருக்கடி காரணமாக மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பரிசளிப்பு விழாவினை நடத்திவ ருகிறது. 

இம்முறை கீழ்க்கண்ட எழுத்தாளர்களுக்கு  பரிசு வழங்கப்படுகிறது: 2018- ஆம் ஆண்டின் சிறந்த எழுத்தாளருக்கான பரிசு   போடி நாயக்கனூர் எஸ். செந்தில் குமார். 2019 -ஆம் ஆண்டுக்கு திருச்சி பாட்டாளி.  2020 -ஆம் ஆண்டுக்கு இங்கிலாந்து  குணா கவியழகன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

கடந்த ஆண்டுகளில் இப்பரிசை வென்றவர்களுள் பலர், பின்னர் சாகித்திய அகாதமி பரிசை வென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுள் இமயம், ஜோ.டிக்ரூஸ், பெருமாள் முருகள், பூமணி, நாஞ்சில் நாடன் போன்ற எழுத்தாளர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

எதிர் வரும் 14-08-2021 மாலை 5 முதல் 6.30 மணிவரை இணையவழியாகப் பரிசளிப்பு விழா நடைபெறும். ஒவ்வோர் எழுத்தாளருக்கும் பரிசுக் கேடயமும் ரூ. 15,000  -க்குரிய காசோலையும் வழங்கப்படும். பேராசிரியர்   சாம் கிதியோன் தலைமையேற்கும் இந்நிகழ்ச்சியில் கவிஞர் சமயவேல்,  எஸ். அற்புதராஜ். பேராசிரியர் வெற்றிச்செல்வன் ஆகியோர் பாராட்டுரை வழங்குவர் என அதில் தெரிவித்துள்ளார்.

Top