logo

சத்தியமங்கலத்தை அருகில் புன்செய் புளியம்பட்டி நகராட்சி பொறியாளரை கண்டித்து வணிகர்கள் போராட்டம்

19/Jul/2021 11:42:10

ஈரோடு, ஜூலை :  ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அருகில் புன்செய் புளியம்பட்டி நகராட்சி பொறியாளரை கண்டித்து வணிகர்கள் கடைகளை அடைத்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

 ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள புன்செய்புளியம்பட்டி நகராட்சிக்கு சொந்தமாக 120 கடைகள் உள்ளன. இந்தக் கடைகளுக்கு ரூ.10,000 முதல் 18,000 வரை நகராட்சி நிர்வாகம் வாடகை வசூல் செய்து வருகின்றது. இந்நிலையில், கடந்த 2 மாதமாக கொரோனா ஊரடங்கு  காரணமாக கடைகள் அடைக்கப்பட்டது. அந்த இரண்டு மாத வாடகையை நகராட்சி நிர்வாகம் ரத்து செய்து தரக்கோரி மனு அளிப்பதற்காக நகராட்சி கடைகளின் குத்தகைகாரர் மற்றும் சங்க பிரதிநிதிகள் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று உள்ளனர். 

அப்போது  நகராட்சி பொறியாளர் பழனிச்சாமி வாடகையை கண்டிப்பாக செலுத்த வேண்டும் எனக்கூறியதுடன் அவர்களை அவமரியாதையாக நடத்தியதாம கூறப்படுகிறது. இதனையடத்து நகராட்சி பொறியாளரின் செயலை கண்டிக்கும் விதமாக நகராட்சிக்கு சொந்தமான கடைகள் அனைத்தையும் வியாபாரிகள் அடைத்து தங்களது எதிர்ப்பை காட்டினர்.

மேலும் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து நகராட்சி பொறியாளர் பழனிச்சாமி கடைக்காரர்களிடம் மன்னிப்பு கேட்டததையடுத்து சமாதானமடைந்த வியாபாரிகள் தங்களது கடைகளை மதியத்திற்குமேல் மீண்டும் திறந்தனர்.

Top