06/Jul/2021 06:47:58
புதுக்கோட்டை, ஜூலை: மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்குக்காரணமான மத்திய அரசை கண்டித்து புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மேற்கு மாவட்ட மனித நேய மக்கள் கட்சி சார்பாக புதுக்கோட்டை கீழராஜ வீதியில் இருந்து டாட்டா மினி வாகனத்தை மாட்டுவண்டி போல் கயிறு கட்டி மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் இழுத்து வந்து அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் அப்துல் கனி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் நிஜாமுதீன், மற்றும் நிர்வாகிகள் அப்துல் மண்ணன், நாகூர் பாய் , ராசப்பா, முகமது சுல்தான் உள்ளிட்ட மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.