02/Oct/2020 07:41:26
புதுக்கோட்டை: உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலித் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் சி.ஜீவானந்தம், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி ஆகியோர் தலைமை வகித்தனர்.
சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி.அன்புமணவாளன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ராமையன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எம்.ஜியாவுதீன் மற்றும் கே.சண்முகம், சி.அடைக்கலசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.