18/Jun/2021 11:30:03
சென்னை, ஜூன்: கொரோனா தொற்று காலந்தில் களப்பணியாற்றி வரும் 1 லட்சத்து 17 ஆயிரத்து 184 காவல்துறை யினருக்கு ஊக்கத்தொகை வழங்க ரூ. 58 கோடியே 59 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், களப்பணியாற்றி வரும் காவல் துறையினர் தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாது கடமையாற்றி வருகின்றனர்.
அவர்களது தன்னலமற்ற பணியினை அங்கீகரிக்கும் விதமாகவும், ஊக்கப்படுத்தும் விதமாகவும், தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றி வரும் இரண்டாம் நிலைக் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான 1 இலட்சத்து 17 ஆயிரத்து 184 காவல் துறையினருக்கு, ரூ.5 ஆயிரம் வீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு முதலைச்சர் மு.க.ஸ்டாலின் (18.6.2021) ரூ. 58 கோடியே 59 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம், காவல் துறையைச் சார்ந்த இரண்டாம் நிலைக்
காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான 1 இலட்சத்து 17 ஆயிரத்து
184 காவல்துறையினரும் தலா
5 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை
பெறுவார்கள்.