21/May/2021 10:51:04
சென்னை: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு முதல்வர் முக.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் தண்டிக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், பி.ரவிச்சந் திரன், எஸ்.நளினி ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்ச ரவை 9.9.2018 அன்று தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பியது.
அந்த அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவு எடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக் குத்தான் இருக்கிறது எனக் கூறி, தமிழக ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு அரசின் அமைச்சரவைத் தீர்மானத்தை அனுப்பி வைத்திருக்கிறது.
இதைச்சுட்டிக்காட்டி 19.5.2021 அன்று குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் தண்டி க்கப்பட்ட 7 பேரும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடுகிறார்கள்.
உச்சநீதிமன்றமே கொரோனா தொற்றின் பரவலைத் தடுக்க சிறைச்சாலைகளில் உள்ள கூட்டநெருக்கடியை நீக்கும் பொருட்டு கைதிகளை விடுதலை செய்ய அறிவுறுத்தியுள்ளது. இச்சூழலில் 7 பேரையும் விடுதலை செய்ய 9.9.2018 அன்று தமிழ்நாடு அமைச்சரவை நிறை வேற்றி அனுப்பியுள்ள தீர்மானத்தை உடனடியாக ஏற்றுக் கொண்டு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எழுதிய கடிதத்தை திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் நேரில் அளித்தார்.