logo
ஏப்.25 மற்றும் மே 1 ஆகிய 2 நாள்களுக்கு அரசு மதுபானக்கடைகளுக்கு விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு

ஏப்.25 மற்றும் மே 1 ஆகிய 2 நாள்களுக்கு அரசு மதுபானக்கடைகளுக்கு விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு

20/Apr/2021 11:19:31

புதுக்கோட்டை, ஏப்:  மகாவீர் ஜெயந்தி(25.4.2021) மற்றும் மே தினம் (1.5.2021) ஆகிய 2  நாட்களில் டாஸ்மாக் நிறுவனத்தின் அனைத்து மதுபான கூடங்களுக்கும் விடுமுறை  என அறிவிக்கப்பட்டுள்ளது.

 புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி..உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்: தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை (கடைகள் மற்றும் மதுக்கூடங்கள்) விதிகள்- 2003, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வையில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி  25.04.2021 அன்று மகாவீர் ஜெயந்தி மற்றும் 1.5.2021 அன்று மே தினம் ஆகிய இரு நாள்களுக்கு  டாஸ்மாக் நிறுவனத்தின் அனைத்து இந்திய தயாரிப்பு அந்நிய மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மதுபானக்கடை மற்றும் மதுபானக் கூடங்களில், அனைத்து  ஹோட்டல்களின்  பார்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

இவ்விரு நாள்களில்  எந்த விதத்திலும் மது விற்பனை செய்யகூடாது. மீறினால் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளார்.


.


Top