logo
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் (பிப்.19) நாளை  தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் (பிப்.19) நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

17/Feb/2021 06:59:45

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர்  மதர்தெரசா பொறியியல் கல்லூரியில்  வரும் (19.2.2021) வெள்ளிக்கிழமை அன்று  சுமார் 100 தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

 இதுகுறித்து சுகாதாரத்துறை  அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்  வெளியிட்ட தகவல்: புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் வேலை வாய்ப்பைப் பெற்றுத்தரும்  நோக்கத்தோடு  புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில்  நடத்தப்படுகிறது.

 ஏற்கெனவே மதர்தெரசா பொறியியல்  கல்லூரியில் இரண்டு கட்டங்களாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டதுஇம்முகாமில் 185 முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன. 13,765 நபர்கள் கலந்து கொண்ட இம்முகாமில் மொத்தம் 3,160 நபர்களுக்கு தனியார் நிறுவனங்களில் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மீண்டும் இதேபோன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இலுப்பூர்  தாலுகா மேட்டுச்சாலையில் உள்ள மதர்தெரசா பொறியியல் கல்லூரியில் வருகிற 19.02.2021 (வெள்ளிக்கிழமைநடைபெறவுள்ளது.

இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறைகளை போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த 100 -க்கும் மேற்ப்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். மேலும் இம்மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். மேலும், உயர்கல்வி, சுயவேலைவாய்ப்பு மற்றும் வங்கி கடன் குறித்து சம்ந்தப்பட்ட துறைகள் அரங்குகள் அமைத்து வழிகாட்டவுள்ளனர்.

 இத்தனியார் துறை முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் .டி.., டிப்ளமோ, பி.., நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைதேடும்  இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மேலும், இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வேலைநாடும் இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in,  என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து பயன்பெற வேண்டும். இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒரே இடத்தில் பல்வேறு நிறுவனங்களின் நேர்காணலில் கலந்து கொண்டு தாங்கள் விரும்பும் வேலைவாய்ப்பினை பெற இது நல்ல வாய்ப்பு என்பதால்  புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

Top