logo
ஈரோடு வழியாக பழனிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள்

ஈரோடு வழியாக பழனிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள்

31/Jan/2021 06:47:11

ஈரோடு, ஜன:  பழனி முருகன் கோவிலுக்கு ஒவ்வொரு வருடமும் தை பூசத்தன்று ஆயிரக்கணக்கான மக்கள் பாதயாத்திரையாக சென்று வழிபடுவது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் கடந்த 28-ஆம் தேதி தைப்பூச விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் விரதமிருந்து இரவு பகல் முழுவதும் பாதயாத்திரையாக செல்ல தொடங்கியுள்ளனர்.

 ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்தும் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பழனிக்கு பாதயாத்திரையாக செல்ல தொடங்கியுள்ளனர். பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு ஆங்காங்கே தன்னார்வலர்கள் அரசியல் கட்சியினர் உணவு தண்ணீர் வழங்கி வருகின்றனர். 

கடந்த வருடம் பழனிக்கு செல்லும் பக்தர்களுக்கு போலீஸ் சார்பில் விபத்துக்களை தவிர்க்கும் வகையில் ஒளிரும் ஸ்டிக்கர், ஒளிரும் பட்டை வழங்கப்பட்டது. ஆனால் இந்த வருடம் இதுபோன்று எதுவும் வழங்கப்படவில்லை. ஒளிரும் ஸ்டிக்கர் ஒளிரும் பட்டை வழங்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில்  தைப்பூசம் முடிந்த பிறகும் பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஈரோடு வழியாக 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று கொண்டிருக்கிறார்கள்.  ஈரோட்டில் பல்வேறு பகுதியில் இருந்து பழனிக்கு பாத யாத்திரையாக  நடந்து சென்றனர். குறிப்பாக சேலம் மாவட்டம் எடப்பாடியில்  இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு நடந்து சென்றனர். அவர்களுக்கு தேவையான உணவு தண்ணீர் பாக்கெட்டை தன்னார்வலர்கள் 

Top