28/Jan/2021 06:56:15
புதுக்கோட்டை-ஜன:புதுக்கோட்டை அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நாளை (ஜன 29).-ஆம் இந்திய பத்திரிகைகள் நாள் விழா நடைபெறவுள்ளது.
கல்லூரியின் தமிழ்த்துறை, புதுக்கோட்டை வாசகர் பேரவை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் ஆகியவை இணைந்து வெள்ளிக்கிழமை நடத்தும் இந்த விழாவுக்கு கல்லூரி முதல்வர் பா.புவனேஸ்வரிதலைமை வகிக்கிறார்.
வாசகர் பேரவைச்செயலர் பேராசிரியர் எஸ். விஸ்வநாதன் அறிமுகவுரையாற்றுகிறார். வாசகர் பேரவை ஆலோசனைக்குழு உறுப்பினர் கருத்துரையாற்றுகிறார். முன்னதாக தமிழ்த்துறைத் தலைவர் பா.சாந்தி வரவேற்புரையும், உதவிப் பேராசிரியர் க. யோகாம்பாள் நன்றியுரையும் ஆற்றுகின்றனர் என்று புதுக்கோட்டை வாசகர் பேரவை தகவல் தெரிவித்துள்ளது.