logo
தமிழகத்தில் நாளை முதல் வெப்பச்சலனம் காரணமாக மழை-வானிலை முன்னறிவிப்பு

தமிழகத்தில் நாளை முதல் வெப்பச்சலனம் காரணமாக மழை-வானிலை முன்னறிவிப்பு

23/Sep/2020 09:32:26

தமிழகத்தில் நாளை முதல் வெப்பச்சலன மழை படிப்படியாக அதிகரிக்கும். அதற்க்கடுத்து வரும் நாட்களில் பெரும்பாலான பகுதிகளில் மழை வாய்ப்பு உருவாகும்.கேரளா, தமிழகத்தின் மேற்குதொடர்ச்சி மலை பகுதிகள் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழையின் இறுதிச்சுற்று நேற்றுடன் முடிவடைந்தது. இன்று ஆங்காங்கே மட்டும் மழை பெய்து வருகிறது. வரும் நாட்களில் தென்மேற்கு பருவமழை படி படியாக விலகும். வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20 அல்லது 25க்குள் துவங்கலாம். நாளை முதல் மேற்கு காற்றின் தீவிரம் குறைந்து விடும் என்பதால் காற்று முறிவு மற்றும் காற்று சந்திப்பு காரணமாக ஒரு சில காற்று பகுதிகள் தவிர அனைத்து மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை வாய்ப்பு உருவாகும்.

அதற்க்கடுத்து வரும் நாட்களில் வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி உருவாகலாம் இதனால் காற்று பகுதிகள் உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் மழை வாய்ப்பு உருவாகும்.

Top