23/Sep/2020 07:44:06
ஈரோடு: ஈரோடு
கருங்கல்பாளையத்தில் உள்ள தொழிலாளர் வருங்கால
வைப்பு நிதி அலுவலகம் முன்பு
இன்று இ பிஎப் ஓய்வூதியம்
பெறுவோர் நல சங்கம் சார்பில்
இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட
ஒருங்கிணைப்பாளர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். ஓய்வு
ஊதியம் பெறுவோருக்கு குறைந்தபட்ச பென்ஷன் ஆக மாதம்
ரூ. 9000 உயர்த்த வேண்டும்.பகத்சிங்
கோசாரியாகமிட்டியின் பரிந்துரை படி மாதம் ரூ.3000
வழங்க வேண்டும் குறைந்தபட்சம் பென்ஷனாக ரூ 2000 வழங்க வேண்டும்.அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் இஎஸ்ஐ மருத்துவ
வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பன
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள்
எழுப்பினர்.