logo
கீழ்பவானி கால்வாயில்  60 ஆண்டுகளுக்கு பிறகு  மறு சீரமைப்புக்கு தமிழக அரசு  710 கோடி ஓதுக்கீடு: விவசாயிகள் வரவேற்பு

கீழ்பவானி கால்வாயில் 60 ஆண்டுகளுக்கு பிறகு மறு சீரமைப்புக்கு தமிழக அரசு 710 கோடி ஓதுக்கீடு: விவசாயிகள் வரவேற்பு

20/Dec/2020 07:44:47

பவானிசாகர்  அணையிலிருந்து கரூர் மாவட்டம் மங்களபட்டி வரை 125 கிலோ மீட்டர் தொலைவு  செல்லும் கீழ்பவானி பாசன கால்வாய் மூலம் 2.07 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கீழ்பவானி கால்வாய் வெட்டப்பட்டு இதுவரை 60 ஆண்டுகளாக சீரமைப்பு  செய்யப்படாத நிலையில், தற்போது தமிழக அரசு கீழ்பவானி கால்வாய் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.710 கோடி  ஒதுக்கப்பட்டு 23-ஆம் தேதி டெண்டர் விடப்பட்டு பிப்ரவரியில் பணிகள் தொடங்கப்படவுள்ளன.

இது தொடர்பான கீழ்பவானி முறைநீர்ப் பாசன சபையின் பொதுக்குழுக்கூட்டம் அதன்தலைவர் காசியண்ணன் தலைமையில் நடைபெற்றது. பின்னர் அச்சங்கத்தின் செயலாளர் பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, 60 ஆண்டுகளுக்குப் பிறகு கீழ்பவானி கால்வாயை மறுசீரமைப்பு செய்ய தமிழக அரசு ரூ.710 கோடியை ஓதுக்கீடு  செய்திருப்பதை வரவேற்கிறோம். இதற்காக நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு நன்றி. இந்த கால்வாய்லில் முறையற்ற பாசனம் செய்பவர்கள் இத்திட்டத்தைப்பற்றி தவறான தகவல் பரப்பி வருவதாகவும் தெரிவித்தார். கால்வாய் மறுசீரமைப்பு மூலம் கரைகள் பலப்படுத்தப்படுத்தப்படும் என்பதே உண்மை நிலை என்றார் அவர்.


Top