21/Sep/2020 11:35:49
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி இது குறித்து வெளியிட்ட தகவல்: மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருதுக்கு தகுதி வாய்ந்த குழந்தைகள், தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து இணையதள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
புதிய கண்டுபிடிப்பு, கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு, சமூகசேவை போன்ற துறைகளில் வீரதீர செயல் புரிந்த தனித்தகுதி படைத்த குழந்தைகளை அங்கீகரிக்கும் விதமாக பால சக்தி புரஷ்கார் விருது என்னும் குழந்தைகளுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. இவ்விருது 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை புத்தகம் ஆகியவற்றை கொண்டதாகும். மேலும், நிறுவனங்களுக்கான விருதிற்கு 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை வழங்கப்படும். ஜனவரி- 26, 2021 -ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கிட தகுதியான விண்ணப்பங்களை வரும் 28.9.2020 -க்குள் இணையவழியில் விண்ணப்;பிக்கலாம்.
இவ்விருதுகளுக்கான விரிவான வழிகாட்டி நெறிமுறைகள் www.nca-wcd.nic.in என்னும் இணையதள பக்கத்தில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்..