logo
 நீட் தேர்வு: 16 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து பயிற்சி பெற்று வருகின்றனர்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

நீட் தேர்வு: 16 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து பயிற்சி பெற்று வருகின்றனர்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

10/Nov/2020 06:48:31

ஈரோடு: ஈரோடுமாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிறுவலூர் மற்றும் வேட்டைகாரன்கோயில் ஆகிய இரு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 400-க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கி தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அங்கு செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: 

பள்ளி திறப்பு குறித்து ஓரிரு நாள்களுக்குள் முதல்வர் அறிவிப்பார். நீட் தேர்வில் பயிற்சி பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த  16,300 பேர்  நேற்று  முதல் பயிற்சி பெற்று வருகின்றனர். 7.5 இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில் 5 லட்சத்து 18 ஆயிரம் மாணவர்கள்கள் அரசு பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார். பள்ளிகளில் சீருடைகள், சாக்ஸ், தயாராக உள்ளது. மாணவர்களுக்கு விரைவில் வழங்கப்படும்.

 தமிழகம் முழுவது 45 சதவிகிதம் பெற்றோர்கள் மட்டுமே கருத்து கேட்பு முகாமில் கலந்து கொண்டனர். பெற்றோர்களின் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளது இது குறித்து நவ. 12-ஆம் தேதிக்குள் முதல்வர் ஆலோசனை செய்து பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பார். நீட் தேர்வு விலக்கு குறித்து வழக்கு நீதி மன்றத்தில் உள்ளது.நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்றார் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்.

Top