logo
ஈரோட்டில் எம்எல்ஏ-க்கள், ஆட்சியர் பங்கேற்ற சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்

ஈரோட்டில் எம்எல்ஏ-க்கள், ஆட்சியர் பங்கேற்ற சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்

31/Oct/2020 06:11:40

ஈரோடு: ஈரோடு தாலுகாவுக்கு உள்பட்ட பிச்சாண்டாம்பாளையம், கதிரம்பட்டி, கூரபாளையம் ஆகிய பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்ற சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடந்தது. 

ஈரோடு அடுத்த மேட்டுக்கடையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமுக்கு, மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் கே .வி .ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 முகாமில் 363 மனுக்கள் பெறப்பட்டன. வீட்டுமனை பட்டா ஓய்வு ஊதியம் புதிய தொகுப்பு வீடு, வடிகால் வசதி சம்பந்தமான மனுக்கள் அதிக அளவில் வந்திருந்தன. முன்னதாக 30 பேருக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையையும், 11 பேருக்கு மின்னணு ரேஷன் கார்டும், 26 பேருக்கு இலவச வேட்டி சேலையும் வழங்கப்பட்டன.

 நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் சி.கதிரவன், எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், கே எஸ் தென்னரசு ஆகியோர் வழங்கினர்.

 பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் இளங்கோ, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வாணி லட்சுமி ஜெகதாம்பாள்,  வருவாய் கோட்டாட்சியர் சைபுதீன், வட்டாட்சியர் பரிமளா தேவி, பகுதி செயலாளர்கள் கேசவமூர்த்தி, ஜெகதீஷ் ,கோவிந்தராஜ், தங்கமுத்து, ஒன்றிய செயலாளர் பூவேந்திர குமார்,   ஆவின் துணைத் தலைவர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Top