logo
ஈரோட்டில் சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

27/Oct/2020 09:42:31

ஈரோடு:  மருத்துவப்படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடுக்கு ஆளுநர் அனுமதி வழங்கக்கோரி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் இன்று(அக்.27) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு காளைமாட்டு சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் கொங்கு மண்டலத்தின் வடக்கு பகுதி அமைப்பு செயலாளர் சுரேஷ் காந்தி தலைமை வகித்தார். 

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஆளுநர் ஓப்புதல் வழங்க வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசு வேலை வாய்ப்புகளில் தமிழர்களை புறக்கணிப்பதை கண்டித்தும் முழக்கங்கள்  எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சமத்துவ மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Top