logo
 பெண்களை இழிவாகப் பேசிய திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிரணியினர் ஆர்ப்பாட்டம்

பெண்களை இழிவாகப் பேசிய திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிரணியினர் ஆர்ப்பாட்டம்

27/Oct/2020 05:28:45

புதுக்கோட்டை: பெண்களை இழிவாகப் பேசிய திருமாவளவனை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தடையை மீறி பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.

பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி  மாநில செயலாளர் கவிதா ஸ்ரீகாந்த் முன்னிலையில் புதுக்கோட்டை மாவட்ட பாஜக மகளிரணி தலைவி சுமதி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் பட்டியலில் தலைவர் மாரி பரமேஸ்வரன் தலைமையிலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில், புதுக்கோட் டை மாவட்ட செயலாளர்கள் விஜயகுமார், சுப்பையா. பாரதிய ஜனதா கட்சி தொழில் பிரிவு மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட மாவட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

 மகளிரணியினர் கையில்  துடைப்பத்துடன்  வந்ததால் காவல்துறையினர் அதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டனர்.அதையும் மீறி மகளிர் அணியினர் திருமாவளவ னின் புகைப்படத்தை செருப்பால் அடித்து எதிர்ப்பு தெரிவித்ததால் காவல்துறைக்கும் பாஜக நிர்வாகிகளுக்கும்  இடையே தள்ளுமுள்ளு  ஏற்பட்டது இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Top