logo
நாட்டுப்புறபாடலை இடைவிடாமல பாடி  உலக சாதனை படைத்த இளைஞருக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பாராட்டு

நாட்டுப்புறபாடலை இடைவிடாமல பாடி உலக சாதனை படைத்த இளைஞருக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பாராட்டு

21/Oct/2020 04:53:26

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், காலாடிப்பட்டியைச் சேர்ந்த இளைஞர் பி.மணிகண்டன் என்பவர் நாட்டுப்புற பாடலை 5 மணி நேரம் தொடர்ந்து பாடி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றதை தொடர்ந்து, அமைச்சர் சி. விஜயபாஸ்கர்  அந்த இளைஞரை நேரில் அழைத்து பாராட்டி பரிசளித்தார். 

காலாடிப்பட்டியைச் சேர்ந்த  இளைஞர்  பி.மணிகண்டன்  சிறுவயது முதலே நாட்டுப்புற பாடல்கள் பாடுவதில் மிகுந்த ஆர்வமுடையவர்  நாட்டுப்புற பாடல்களில் ஏதேனும் சாதனை படைக்க வேண்டும் என்று தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.  இந்நிலையில், கோயம்புத்தூரில் கடந்த 13.10.2020 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கிராமிய புதல்வன் கலைக்குழு மூலம் நாட்டுப்புற பாடல்களை எவ்வித இடைவெளியும் இன்றி 5 மணி நேரம் தொடர்ந்து பாடி சாதனை படைத்தார்.

நாட்டுப்புற பாடல்களை தொடா;ந்து 5 மணி நேரம் எவரும் இதுவரை பாடியதில்லை. இத்தகைய சாதனையின் மூலம் நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார். புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இப்பெருமையை தேடித்தந்த மணிகண்டனை நேரில் அழைத்து அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பாராட்டினார்.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி உடனிருந்தார்.


Top