logo

பெண்ணுக்கு ஆபாச செய்தி அனுப்பிய குன்னூர் இளைஞர் கைது.

21/Apr/2020 11:29:22

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதி இளம்பெண்ணுக்கு சமூக வலைதளங்கள் மூலம் ஆபாசமாக தகவலை பதிவிட்டு தொல்லை கொடுத்த குன்னூரைச் சேர்ந்த இளைஞரை செவ்வாய்க்கிழமை (ஏப்.21)போலீஸார் கைது செய்தனர்.

ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த ஆண்டு பொறியியல் படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருக்கிறார்,இந்நிலையில், அவருடன் கல்லூரியில் பயின்ற உதகை மாவட்டம் குன்னூர் ஒட்டுப்பட்டறையைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் நவீன்குமார்(22) என்ற இளைஞர்  அப்பெண்ணுக்கு முகநூல், கட்செவி அஞ்சல் மூலம் தொடர்ந்து அவதூராகவும், ஆபாசமாகவும் பதிவிட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து, அந்த பெண் வடகாடு காவல்நிலையத்தில் அளித்த புகாரைத்தொடர்ந்து, நவீன்குமாரை வடகாடு போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

 

Top