19/Oct/2020 10:30:49
புதுக்கோட்டை விக்டரி சங்கமும் நிஜாம் காலனியில் உள்ள குளோரியஸ் மழலையர் பள்ளி நிர்வாகத்தினரும் இணைந்து மாவட்ட நவராத்திரி விழாவை இன்று கொண்டாடினர்.
லயன்ஸ் சங்க மூத்த உறுப்பினர் சோலை சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்ற நவராத்திரி விழாவையொட்டி பல்வேறு வகையான கொலு பொம்மைகளை வைத்து சிறப்பான அலங்காரம் செய்து பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மாணவர்களுக்கு பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.
புதுக்கோட்டை விக்டரி லயன்ஸ் சங்கமும் விராலிமலை வாசகர் வட்ட நூலக மையமும் இணைந்து மாணவர்களுக்கு இணையதள பேச்சுப்போட்டி கவிதை போட்டி, கட்டுரை போட்டி திறன் வளர்ப்பு போட்டி ஓவியப் போட்டி உள்ளிட்ட பல்வேறு வகையான இணையவழி போட்டி நடத்தியது. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மெடல் மற்றும் சான்று எழுதுகோல் அடங்கிய கிட் வழங்கப்பட்டது.
விழாவில், புதுக்கோட்டை விக்டரி லயன்ஸ் சங்கத் தலைவர் காமராஜ், லயன்ஸ் சங்க மாவட்ட நவராத்திரி தலைவர் பாஸ்கரன் மண்டல தலைவர் கனகராஜ், வட்டாரத் தலைவர் திருவள்ளுவன், சங்க செயலாளர் செந்தில்குமார், முன்னாள் மண்டல தலைவர் ஜவஹர், ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால், சங்க செய்தி தொடர்பாளர் ஜெயராஜ், உறுப்பினர்கள் சிவலிங்கம், வசந்தகுமார், பாலசுப்ரமணியன் மற்றும் ஆலங்குடி லயன்ஸ் சங்க தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோர் லயன்ஸ் சங்க பொறுப்பாளர்களும் பள்ளி நிர்வாகத்தினரும் கலந்து கொண்டனர்.