11/Oct/2020 10:42:46
புதுக்கோட்டை: பாரத பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க கொரோனா விழிப்புணர்வு மக்கள் இயக்கமாக மாற்றப்பட உள்ளது. இதற்கான திட்டத்தை தூத்துக்குடியில் வரும் 13-ஆம் தேதி தமிழக முதல்வர் தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவித்தார் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்தில் இன்று(11.10.2020) மாவட்ட ஆட்சியர் பி.
உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,
இயற்கை வேளாண்
உற்பத்தியாளர் சங்க விவசாயிகளுக்கு ரூ.21 லட்சம்
மதிப்புள்ள கடனுதவிக்கான
காசோலையையும், விராலிமலை
பகுதியில் மின்னல்
தாக்கி உயிரிழந்தவரின்
குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதி ரூ.
4 லட்சத்துக்கான காசோலையையும் சுகாதாரத்துறை
அமைச்சர் சி.
விஜயபாஸ்கர் வழங்கினார்.
தமிழக
முதல்வரால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையின்
காரணமாக கொரோனாவின் தாக்கம்
கட்டுக்குள் வைத்திருக்ப்பட்டுள்ளது. அதிக
அளவில் ஆர்.டி பி.சி.ஆர் பரிசோதனை தமிழகத்தில்
தான்
செய்யப்பட்டு வருகிறது தினந்தோறும்
90 ஆயிரம் பரிசோதனைகள்
செய்யப்படுகிறது.தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம்
10 சதவீதத்திற்கும் குறைவாக கட்டுக்குள்
வைக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் இரண்டாவது அலை என்று கூறப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் கொரோனா பாசிடிவ் சதவீதம் தமிழகத்தில் குறைந்துள்ளது.பிளாஸ்மா சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை முறைகள் நல்ல முறையில் தமிழகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு நோயாளிகள் பூரண குணமடைந்து வருகின்றனர். தாமதமாக மருத்துவமனைக்கு வருபவர்களை காப்பாற்றுவது சவாலாக உள்ளது.இன்றைக்கு 5 லட்சத்து 96 ஆயிரம் பேர் கொரானாவிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர். இதை மிகப்பெரிய சாதனையாக கருத வேண்டும்.
பாரத பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க கொரோனா விழிப்புணர்வு மக்கள் இயக்கமாக மாற்றப்பட உள்ளது தமிழக முதல்வர் இந்த திட்டத்தை தூத்துக்குடியில் வரும் 13-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார் என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.