07/Oct/2020 10:59:04
தமிழக அரசுக்கும் கல்வித்துறைக்கும் புதுக்கோட்டை மாவட்ட தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் தலைவர் அஸரப் அன்சாரி தலைமையில் சென்ற வாரம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கல்வித்துறைக்கு பல்வேறு கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன.
அதில், கட்டாய கல்வி உரிமை சட்டம் 12(1) சி ன் படி இலவச கல்வி பயிலும் மாணவர் சேர்க்கையை இந்த கல்வியாண்டில் குறைந்த அளவிலேயே மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதால் மீண்டும் மறுவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கல்வித்துறையும் ஏற்று மீண்டும் 12.10.2020 முதல் 7.11.2020 வரை வாய்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது.
எங்களது தீர்மானத்தை நிறைவேற்றித்தந்த தமிழக அரசுக்கும் கல்வித்துறைக்கும் கூட்டமைப்பின் தலைவர் அஸரப் அன்சாரி,செயலாளர் முத்துகருப்பன், பொருளாளர் மேசியா சந்தோஷம், அமைப்பு செயலாளர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் கே. ரமணன் உள்ளிட்டோர் நன்றி தெரிவித்துள்ளனர். மற்ற தீர்மானங்களையும் கல்வித்துறை நிறைவேற்றித்தர வேண்டுமென கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.