05/Oct/2020 06:38:06
புதுக்கோட்டை: புதுக்கோட்டை விக்டரி லயன்ஸ் சங்கம் சார்பில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் 4 பேருக்கு ஞானச்சுடர் விருது வழங்கும் விழா நேற்று(அக்.4) நடைபெற்றது.
இதில். காமராஜபுரம் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் அயூப்கான், திருநல்லூர் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் தர்மசேகர், திருவரங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் முருகையன், நச்சாந்துபட்டி ராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் ராகேஷ் ஆகிய 4 பேருக்கு கு பொன்னாடை அணிவித்து விருது, சான்றிதழ்கள் வழங்கப்பட்டது..
இதில், சிறப்பு விருந்தினர்களாக ஆசிரியர் பயிற்சி கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஆர்.செல்லத்துரை, ஆசிரியர் தினவிழா மாவட்ட தலைவர் திருமதி விஜயலட்சுமி சண்முகவேல், மண்டலத் தலைவர் கனகராஜ், வட்டாரத் தலைவர் திருவள்ளுவன், முன்னாள் மண்டல தலைவர் பி.ஜவஹர், சங்க செயலாளர்கள் செந்தில்குமார்
இளவரசு, முன்னாள் தலைவர்கள் ராஜகோபால், சோலை சுப்பிரமணி, மதிவாணன், செந்தில்குமார், ஆலங்குடி லயன்ஸ் சங்க தலைவர் சீனிவாசன், பேராவூரணி கோக்கனட் சிட்டி லயன்ஸ் சங்க தலைவர் இளங்கோ, மற்றும்
பேராவூரணி லயன்ஸ் கிளப் தலைவர் கோவிதரன் மற்றும் லயன்ஸ் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.விழாவை விக்டரி லயன்ஸ் சங்கத்தின் முன்னாள் தலைவர்ஆண்டனி சகாயராஜ் தொகுத்து வழங்கினார். இறுதியில், சங்க செயலாளர் இளவரசு நன்றி கூறினார்.