logo
அந்தியூரில் 108 ஆம்புலன்சை அழைத்தால் சம்பவ இடத்திற்கு முதலில் தனியார் ஆம்புலன்ஸ் வருவதாக  மக்கள் புகார்

அந்தியூரில் 108 ஆம்புலன்சை அழைத்தால் சம்பவ இடத்திற்கு முதலில் தனியார் ஆம்புலன்ஸ் வருவதாக மக்கள் புகார்

02/Sep/2021 11:06:24

ஈரோடு, செப்: அந்தியூரில் 108 ஆம்புலன்சை அழைத்தாள் 108 ஆம்புலன்ஸ் வருவதற்கு பதிலாக முதலில் சம்பவ இடத்திற்கு தனியார் ஆம்புலன்ஸ் வருவதாகவும், தனியார் ஆம்புலன்ஸை யாரும் அழைக்காத போது சம்பவ இடத்திற்கு எப்படி தனியார் ஆம்புலன்ஸ்கள் வருகின்றன. 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், தனியார் ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் கையூட்டுப் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு தகவல் தெரிவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வாகன விபத்து ஏற்பட்டாலோ அல்லது ஏதேனும் மருத்துவம் சார்ந்த அவசர தேவைக்கு சிகிச்சைக்கு செல்ல வேண்டும் என்றாலே, பெரும்பாலானோர் 108 ஆம்புனஸ்க்கு போன் செய்கின்றனர், ஆனால், அந்த விபத்து நடந்த இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்னாடி தனியார் ஆம்புலன்ஸ்கள் அந்த இடத்திற்கு வந்துவிடுவதாகவும், பின்னர் வேறு  வழியின்றி பணம் கொடுத்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இச்சம்பவம் கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் நடப்பதாகவும், பெரும்பாலும் 108 ஆம்புலன்ஸ் போன் செய்து அழைத்தால்   தாமதமாகதான் வருவதாகவும் தனியார் ஆம்புலன்ஸிற்கு போன் செய்யாமலேயே வந்து விடுவதாகவும்  பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கும்போது 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கிறோம். ஆனால் அவர்கள் வருவதற்கு முன்னதாகவே  சம்பவ  இடத்திற்கு தனியார் ஆம்புலன்ஸ்கள் வந்து விடுகின்றன.  யாரும் அழைக்காதபோது அவர்களுக்கு எப்படி தகவல் கிடைக்கிறது.  108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கையூட்டு பெற்றுக் கொண்டு, தனியார் வாகனத்துக்கு தகவல் தெரிவிக்கிறார்களோ  என்ற  சந்தேகம் எழுந்துள்ளது . இதுகுறித்து அரசு அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அந்தியூரில் ஒரே ஒரு 108 ஆம்புலன்ஸ் மட்டுமே உள்ளதாகவும் மேலும் ஒரு 108 ஆம்புலன்ஸ் எண்ணிக்கையை  அதிகப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

இந்தக், குற்றச்சாட்டு குறித்து 108 ஆம்புலன்ஸ் பணிபுரியும் உழியர்களிடம் கேட்டபோது தாங்கள் அவ்வாறு எந்த ஒரு கையூட்டுப் பெற்றுக்கொண்டு தனியார் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிப்பதில்லை என குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். குற்றச்சாட்டு குறித்து அரசு அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி உண்மையை கண்டறியவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Top