logo
ஈரோட்டில்  204 இடங்களில் 29 ஆயிரம் பேருக்கு கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது

ஈரோட்டில் 204 இடங்களில் 29 ஆயிரம் பேருக்கு கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது

28/Aug/2021 11:15:16

ஈரோடு, ஆக:   ஈரோடு மாவட்டத்தில் 204 இடங்களில் நடைபெற்ற முகாம்களில்  29 ஆயிரம் பேருக்கு கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. தற்போது வரை மாவட்டத்தில் 9.80 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி கையிருப்பு தகுந்தார் போல் போடப்பட்டு வருகிறது. பெரும்பாலும் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோவேக்சின் முதல் டோஸ் மற்றும் இரண்டாம் டோஸ்  தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் சனிக்கிழமை ஈரோடு, மொடக்குறிச்சி கொடுமுடி பெருந்துறை பவானி அந்தியூர் கோபி சத்தியமங்கலம் தாளவாடி நம்பியூர் உள்ளிட்ட 180 இடங்களிலும், ஈரோடு மாநகராட்சி பகுதியில் 24 இடங்களிலும் என மொத்தம் 204  இடங்களில் 20 ஆயிரத்து 180 பேருக்கு டோக்கன் அடிப்படையில் கோவிஷீல்டு தடுப்பூசி போடும் முகம் நடைபெற்றது. 

இதேபோல் கோவேக்சின்  தடுப்பூசி  ஈரோடு மாவட்டத்தில் 204 இடங்களில் 9010 பேருக்கு போடப்பட்டது. இதில் ஈரோடு மாநகர் பகுதியில் மட்டும் 24 இடங்களில் இரண்டு தடுப்பூசியும்  போடப்பட்டுள்ளது. இவ்வாறாக இன்று மட்டும் மொத்தம் 29 ஆயிரத்து 190 பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

மக்கள் காலையிலேயே ஆர்வத்துடன் அந்தந்த தடுப்பூசி போடும் முகாமிற்கு சென்று நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

Top