19/Aug/2021 11:28:06
புதுக்கோட்டை, ஆக: புதுக்கோட்டையில் பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் முன்னாள் தலைவரும் முன்னாள் துணை ஆளுனர் மறைந்த ஆர் .முத்துசாமி உருவப்படத் திறப்பு மற்றம் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை கிங் டவுன் ரோட்டரி ஹாலில் நடைபெற்ற நிகழ்வுக்கு பேலஸ்சிட்டி ரோட்டரி சங்கத்தலைவர் துரைமணி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஆர் .சுரேஷ்குமார் கலந்துகொண்டு மறைந்த ஆர் .முத்துசாமி உருவப்படத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தி பேசினார்.
காரைக்குடி அழகப்ப கல்லூரி முன்னாள் துணைவேந்தர் சொ .சுப்பையா . வர்த்தகக்கழக நிர்வாகிகள் சீனு .சின்னப்பா ஆர் சேவியர், சாகுல்ஹமிது பல்வேறு ரோட்டரிசங்க நிர்வாகிகள் , முதன்மை கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி.
கவிஞர் தங்கம் மூர்த்தி டாக்டர் ராம்தாஸ்,வழக்குரைஞர் த. சந்திரசேகரன் , கம்பன் கழக செயலாளர் இரா .சம்பத்குமார், ரோட்டரி மாவட்ட பொது செயலாளர் எம்ஆர். முருகப்பன், துணை ஆளுனர் ஆர். கருணாகரன், வில்சன், கான்அப்துல் கபார்கான்.
பட்டிமன்றபேச்சாளர் பாரதி, சங்கப் பொருளர் ரவிச்சந்திரன், பேலஸ்சிட்டி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் நிர்வாகிகள் மற்றும் இலக்கிய, ஆன்மிகஅன்பர்கள், கல்வியாளர்கள் உட்படபலர் கலந்து கொண்டு பேசினர். நிறைவாக செயலாளர் பாஸ்கர் நன்றி கூறினார்.