logo
 சர்வதேச நிறுனங்களின் சார்பாக மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியருக்கு ஈ.வெ.ரா. பெரியார் பன்னாட்டு விருது

சர்வதேச நிறுனங்களின் சார்பாக மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியருக்கு ஈ.வெ.ரா. பெரியார் பன்னாட்டு விருது

10/Aug/2021 12:21:51

மதுரை, ஆக:  மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியற்புலத்தமிழியல்துறைத் தலைவராகப் பணியாற்றி வரும் தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருதாளர் முனைவர் போ.சத்தியமூர்த்தியின்  தமிழப் பணிகளையும், சமூக நீதி, சமத்துவம்,சகோதரத்துவம் மொழிப்பற்று, கல்வி ஆகியவற்றைப் பாராட்டிச் சர்வதேச அமைப்புகளான உலகதமிழர்கள் இணைய வழி மன்றம் துபாய், கலைப்பூக்கள் கலைக்கழகம் இலங்கை, திருவள்ளுவர் கல்லூரி பாபநாசம் ஆகிய நிறுவனங்கள்இணைந்துசமூக சமத்துவத்திற்கான ஈ.வெ. ரா.பெரியார் பன்னாட்டு விருது 2021  வழங்கிக் கௌரவிக்கப்பட்டது .

உலக தமிழர்கள் இணைய வழி மன்றம் துபாய் கலைப்பூக்கள் கலைக்கழகம் இலங்கை திருவள்ளுவர் கல்லூரி  இலங்கை, திருவள்ளுவர் கல்லூரி பாபநாசம்,  பிரபா இலக்கியப் பதிப்பகம் சங்கரன்கோவில் ஆகிய சர்வதேச அமைப்புகள் இணைந்து நவீன உலகப் பாடத் திட்டம் (MODERN WORLD CURRICULAM ) என்னும் பொருளில் இணையவழி நடைபெற்ற பல் துறைப் பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் முனைவர் போ.சத்தியமூர்த்திக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

இவர் தமிழ்மொழிக்கு வளம்சேர்க்கும்வகையிலும், பண்பாட்டு மரபுகளை வெளிக்கொண ரும் வகையிலும், பண்பாட்டுச் செல்வங்களைப் பேணிப் பாதுகாத்து, ஆவணப்படுத்தும்  வகையிலும், சர்வதேச நாடுகளில்தமிழ்மொழியின் நிலையை அறிந்துகொள்ளும் வகையில் தேசிய, பன்னாட்டுக் கருத்தரங்கு பயிலரங்குகள்,

மற்றும் கலை விழாக்களைச் சர்வதேசப் பேராசிரியர்களையும் , தமிழ் அறிஞர்களையும், தமிழ் ஆர்வளர்களையும் அழைத்து நிகழ்த்தி வருவதும்,இந்தியா மற்றும் சர்வதேசப் பள்ளி,கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள், தமிழஞறிஞர்கள், ஆசிரியர்கள் , பேராசிரி யர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மரபுக் கலைஞர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நிகழ்வுகளைத் தொடர்ந்து நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது .

Top