logo
கொரோனா பரவல்: ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி

கொரோனா பரவல்: ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி

10/Aug/2021 01:07:40


ஈரோடு, ஆக: ஈரோடு மாவட்டத்தில் திங்கள்கிழமை  முதல் டாஸ்மாக் கடைகள் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, திங்கல்கிழமை  காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அனைத்து கடைகளும் இங்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 5 மணிக்கு பிறகு அனைத்து கடைகளும் அடைக்கப் உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்த போல் மாவட்டத்தில் நோய் அதிகம் பரவக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு அந்த பகுதியில் மட்டும் வரும் சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் அனைத்து கடைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. 

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திங்கள்கிழமை(9.8.2021) முதல் ஈரோடு மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது ஈரோடு மாவட்டத்தில் 214  டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது.

கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் பார் உடன் இயங்கக்கூடிய டாஸ்மாக் கடைகள் மட்டும் செயல்படாமல் உள்ளது. மற்ற சாதாரண டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.  இந்த தகவலை ஈரோடு மாவட்ட டாஸ்மாக் பொது மேலாளர் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளார்.

Top