logo
தாளவாடி தொட்டகாஜனூர் துணை சுகாதார நிலையத்தில் மக்களை தேடி மருத்துவம்   திட்டத்தை அமைச்சர் சு.முத்துசாமி தொடக்கி வைத்தார்.

தாளவாடி தொட்டகாஜனூர் துணை சுகாதார நிலையத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை அமைச்சர் சு.முத்துசாமி தொடக்கி வைத்தார்.

05/Aug/2021 11:57:08

ஈரோடு, ஆக: ஈரோடு மாவட்டம், தாளவாடி தொட்டகாஜனூர் துணை சுகாதார நிலையத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, மக்களை தேடி மருத்துவம்   திட்டத்தினை தொடக்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டம், தொட்டகாஜனூர் துணை சுகாதார நிலையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர்.எஸ்.செல்வராஜ் மற்றும் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலையில், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர்  சு.முத்துசாமி கூறியதாவது: தமிழக முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின்,  பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தேர்தலுக்கு முன்பே திட்டமிட்டு என்னென்ன பணிகள் மக்களுக்காக செய்யப்பட வேண்டும், எதில் குறைபாடு இருக்கிறது, எதில் தாமதம் ஏற்படுகிறது, எதில் மக்கள் சிரமப்படுகிறார்கள் என்பதையெல்லாம் உணர்ந்து, அதற்கென திட்டமிட்டு, பல்வேறு திட்டங்களை தேர்தலுக்கு முன்பே அறிவித்தார்.

தமிழக முதல்வராக பதவியேற்ற பின்னர் அத்திட்டங்களோடு மேலும் பல திட்டங்களை இணைத்து அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சரின் தொலைநோக்கு திட்டங்கள் என்ற தலைப்பில் பல்வேறு திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியரிடம்  வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்,  சுகாதாரத்துறையைச் சேர்ந்த அலுவலர்களும், தாளவாடியில் இருக்கின்ற ஆரம்ப சுகாதார மையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்துதல் என்ற திட்டத்தை அரசிற்கு அனுப்பியுள்ளார்கள். இங்கு ஏற்கெனவே 5 மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். இத்திட்டம் நிறைவேற்றப்படும் பொழுது மேலும் கூடுதல் வசதிகள் மேற்கொள்ளப்படும். 

இங்கு உள்ள மலைவாழ் மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக கீழே இறங்கி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதனை தவிர்த்து, ஆரம்ப சுகாதார மையத்தை முழுமையான பயன்பாட்டிற்கு மருத்துவமனையாக கொண்டுவரும்பட்சத்தில் பல்வேறு சிரமங்கள் தவிர்க்கப்படும். எனவே இத்திட்டத்தை நிறைவேற்றி வழங்க ஏதுவாக தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு, விரைவில் நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

முதற்கட்டமாக தாளவாடி வட்டாரத்திலும் அதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தாளவாடி வட்டாரத்தில் முதற்கட்டமாக 1409 பயனாளிகள் பயன்பெறவுள்ளனர் . படுத்த படுக்கையில் உள்ள நோயாளிகளுக்கு இயன்முறை மருத்துவம் நோய்த் தடுப்பு பராமரிப்பு பணியாளர்கள் மற்றும் உடற்பயிற்சி சிகிச்சையாளர் மூலம் சிகிச்சைகள் வழங்கப்படவுள்ளன என்றார் அமைச்சர் முத்துசாமி.

 தொடர்ந்து உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா மாறுதல் ஆணைகளையும், 4 பயனாளிகளுக்கு தலா ரூ.12,000ஃ- மதிப்பில் முதியோர் மற்றும் விதவை உதவித்தொகைகளையும் மற்றும் 60 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும் வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில், கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் பழனிதேவி, உதவி இயக்குநர் ஊராட்சிகள உமாசங்கர், துணை இயக்குநர் சுகாதார பணிகள மரு.சவுண்டம்மாள், தாளவாடி வட்டாட்சியர் வெ.உமாமகேஷ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Top